2015-09-05 15:47:00

கடுகு சிறுத்தாலும் – சாம்பலுக்கு இரையாகாத சின்னப் புல்


புல்லை மையப்படுத்தி எழுதப்பட்ட ஓர் ஆங்கில கவிதை... கதை என்றும் சொல்லலாம்.

அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "துணிச்சல்னா என்னாண்ணே?" என்று அண்ணனிடம் கேட்டான். அண்ணன், தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று, தனக்குத் தெரிந்த மிருகங்களை வைத்து துணிச்சலை விளக்கப் பார்த்தான். தம்பிக்கு விளங்கவில்லை. அப்போது, அவர்கள் நடந்துசென்ற பாதையில், யாரோ ஒருவர், புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்துபோன புல்தரையின் நடுவில், ஒரு சின்னப் புல் மட்டும், தலை நிமிர்ந்து, நின்று கொண்டிருந்தது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் துணிச்சல்" என்றான்.

முற்றிலும் எரிந்துபோன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல், துணிச்சலுக்கு ஓர் அடையாளம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பதுதான் துணிச்சல்... அதுதான் விசுவாசம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.