செப்.01,2015. 'இன்று படைப்பைப் பாதுகாப்பதற்கான உலக செப நாள். நாம் இதற்காக உழைக்கவும் செபிக்கவும் செய்வோம்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், படைப்பை பாதுகாக்கும் உலக செப நாள், இச்செவ்வாய்க்கிழமையன்று உலகம் முழுவதும் திருஅவையில், பல்வேறு திட்டங்களுடன் சிறப்பிக்கப்பட்டது.
1989ம் ஆண்டு முதல் செப்டம்பர் முதல் தேதியை படைப்பை பாதுகாக்கும் செப நாளாக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர் சிறப்பித்து வருவதில், இவ்வாண்டு முதல், கத்தோலிக்க திரு அவையையும் இணைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இயற்கையைப் பாதுகாப்பதற்கென பல்வேறு நடவடிக்கைகளை திருஅவை, பல காலமாக மேற்கொண்டு வருகின்றபோதிலும், அதிகாரப் பூர்வமாக அதற்கென செப்டம்பர் முதல் தேதியை அறிவித்து ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையுடன் இணைந்து செப நாளை சிறப்பித்தது, இதுவே முதல்முறையாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |