2015-08-27 15:05:00

நேர்காணல்–தங்கப்பதக்கங்கள் வென்ற கத்தோலிக்க மாற்றுத்திறனாளி


ஆக.27,2015. திருச்சி பொன்மலைப்பட்டியில் வாழும் செல்வி ஜெனித்தா ஆன்டோ அவர்கள் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை சுலோவாக்கிய நாட்டுத் தலைநகர் பிராட்டிஸ்லாவில் நடைபெற்ற 15வது அகில உலக மாற்றுத்திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 11 நாடுகளிலிருந்து 38 வீரர்கள் கலந்துகொண்டனர். இதற்கு முன்னர் 2013, 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற  உலக மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 28 வயது மாற்றுத்திறனாளி ஜெனித்தா ஆன்டோ அவர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களின் சாதனைகளை வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகக் கேட்டோம்








All the contents on this site are copyrighted ©.