2015-08-26 15:46:00

வேளாங்கண்ணி அன்னை திருநாளையொட்டி சிறப்பு ஏற்பாடுகள்


ஆக.26,2015. செப்டம்பர் 8ம் தேதி சிறப்பிக்கப்படும் வேளாங்கண்ணி அன்னை மரியாவின் திருநாளையொட்டி, ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமை, துவங்கும் நவநாள் முயற்சிகளிலும், திருவிழாவிலும் கலந்துகொள்ள வருகைதரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு உதவிகள் செய்ய, நாகப்பட்டினம் மாவட்டம், அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது என்று, மாவட்ட ஆட்சியர், பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

1000த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுவர் என்றும், அன்னையின் பசிலிக்காவைச் சுற்றி, 55 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வேளாங்கண்ணிக்கு சிறப்பு இரயில்கள் ஆகஸ்ட் 28, இவ்வெள்ளி முதல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.