2015-08-24 16:24:00

திருத்தந்தை : உக்ரைனில் அமைதி நிலவ செபியுங்கள்


ஆக.24,2015. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைனில் மீண்டும் துவங்கியுள்ள மோதல்கள் குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இதனை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியைக் கொணர்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மதிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.

உக்ரைன் நாட்டின் மனிதாபிமான நெருக்கடிகளை கருத்தில்கொண்டு, நல்மனம் கொண்டோர் மற்றும் நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதி நடவடிக்கைகள் மதிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ செபிக்குமாறும் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.