2015-08-22 16:03:00

நைஜீரிய ஆயர்கள்:இறைவன் ஆற்றியுள்ள நன்மைகளுக்கு நன்றி


ஆக.22,2015. நைஜீரியாவில் இறைவனின் பெருங்கருணையால் இவ்வாண்டில் பொதுத் தேர்தல்களும், அரசு மாற்றமும் அமைதியான முறையில் நடைபெற்றன என்று அந்நாட்டு ஆயர்கள் தங்களின் அறிக்கையில் கூறியுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நைஜீரியாவில் உருவாகியுள்ள புதிய சூழல் தங்களின் நம்பிக்கையையும் புதுப்பித்துள்ளது என்றும் கூறியுள்ள ஆயர்கள், அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதைய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஊழல், பாரபட்சம், அரசில் உறவினர்க்கு சலுகை போன்ற நடவடிக்கைகளை அகற்றி, சட்டம் ஒழுங்கு மதிக்கப்படுகின்ற, நீதியும் சமத்துவமும் நிறைந்த நாட்டை உருவாக்க புதிய அரசு முயற்சிக்குமாறும் கேட்டுள்ளனர் ஆயர்கள்.

வருகிற அக்டோபர் 4ம் தேதி முதல் 25ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் பற்றியும் கூறியுள்ள  நைஜீரிய ஆயர்கள், குடும்பம் நன்முறையில் வளர்வதற்கு, சமுதாயம் தன்னால் இயன்ற வாய்ப்புகள் அனைத்தையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.