2015-08-19 16:17:00

பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலாவில், 'டி.வி. மரியா'


ஆக.19,2015. நம் கடவுள் தன்னைப்பற்றிய எண்ணங்களிலேயே மூழ்கியிருக்கும் கடவுள் அல்ல, மாறாக, தொடர்புகளின் கடவுள் என்றும், அவர்  உருவாக்கியத் தொடர்புகளைத் தொடர, திருஅவையைப் பணித்துள்ளார் என்றும் ஆசிய கர்தினால் ஒருவர் கூறினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலாவில், 'டி.வி. மரியா' என்ற பெயரில், அண்மையில் துவக்கப்பட்டுள்ள ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசையை, அண்மையில் துவக்கிவைத்த மணிலா கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.

பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் கண்காணிப்பில் துவக்கப்பட்டுள்ள இந்த அலைவரிசை, ஒரு மறைபரப்புப் பணி முயற்சியே தவிர, பேரும் புகழும் பெறுவதற்காக நடத்தப்படும் வர்த்தக அலைவரிசை அல்ல என்று கர்தினால் தாக்லே அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

24 மணிநேரமும் இயங்கும் இந்த அலைவரிசையின் நிகழ்ச்சிகள், கேபிள் நிறுவனங்களை நடத்துபவர்கள் வழியாகவும், இணையத்தளம் வழியாகவும் மக்களைச் சென்றடையும் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews/CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.