2015-08-18 14:48:00

பால்மசோலா சிறையின் தர உயர்வுக்கு திருத்தந்தைக்கு நன்றி


ஆக.18,2015. பொலிவியா நாட்டின் பெயர்போன Santa Cruz-Palmasola சிறையின் தரத்தை உயர்த்துமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், அச்சிறையின் தரத்தை மேம்படுத்துவதற்கு தற்போது சிறை அதிகாரிகள் தீர்மானித்திருப்பதாக பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பொலிவியா நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின்போது கடந்த ஜூலை 10ம் தேதி பால்மசோலா சிறையைப் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சிறையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, ஒவ்வொரு கைதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவை அதிகரிக்குமாறு பரிந்துரைத்தார்.

அதன்படி, பொலிவிய அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி ஒவ்வொரு கைதிக்கும் ஒரு நாளைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவை அதிகரித்துள்ளதாக, அச்சிறையின் பொது இயக்குனர் Jorge Lopez அவர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

Santa Cruz-Palmasola சிறையில் ஏறக்குறைய நான்காயிரம் கைதிகள் உள்ளனர்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.