2015-08-08 14:17:00

கடுகு சிறுத்தாலும் – அமைதிக்காக ஆயிரமாயிரம் காகித நாரைகள்


1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, Sadako Sasaki என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு, இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று  கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.

Sadakoவின் தோழிகள் அவரிடம் ஒரு ஜப்பான் புராணக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி Sadako, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி Sadako நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.

இன்றும், ஆயிரக்கணக்கான குழந்தைகள், Sadakoவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்குகின்றனர். ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் நிகழ்ந்த கொடூரம், இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் குழந்தைகள், இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின் கடமை.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாடு, நாகசாகியை, அணுகுண்டால் அழித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.