2015-08-06 16:09:00

ஈராக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தையின் ஆறுதல் மடல்


ஆக.06,2015. உலகின் பல பகுதிகளில் வதைபட்டு வரும் கிறிஸ்தவர்களின் கொடுமைகள் குறித்து குரல் கொடுக்க நான் பலமுறை ஆசித்துள்ளேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி, ஈராக்கிலிருந்து விரட்டப்பட்டு, ஜோர்டான் நாட்டில் கிறிஸ்தவர்கள் அடைக்கலம் புகுந்த துயர நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள, தன் சார்பில், இத்தாலிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் Galantino Nunzio அவர்களை, திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 9ம் தேதி முடிய, ஜோர்டனில் பயணம் மேற்கொண்டுள்ள ஆயர் Nunzio வழியாக, எருசலேம், இலத்தீன் வழிபாட்டு முறை துணை ஆயர், Maroun Lahham அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதத்தில், கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் துயரங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் துயர்களைக் கண்டு தங்கள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்ளாமல், துன்புறுவோருக்கு ஆறுதலாக விளங்கும் தலத்திரு அவைக்கும், துறவு சபைகளுக்கும் தன் ஆழ்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் இம்மடலில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.