2015-08-03 16:32:00

புனித அவிலாதெரேசாவின் 500ம் ஆண்டை சிறப்பிப்போருக்கு வாழ்த்து


ஆக.03,2015. "இயேசுவின் புனித தெரேசா, வாழ்வின் ஆசிரியை" என்ற தலைப்பில் இஸ்பெயினின் அவிலா நகரில் இடம்பெறும் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கருத்தரங்கில் பங்குபெறுபவர்களுக்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் மறைவல்லுனராகிய புனித அவிலா தெரேசாவின் 500வது பிறந்த ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக இடம்பெறும் இக்கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இந்த வாழ்த்துச் செய்தி, புனித அவிலா தெரேசாவின் தியான வாழ்வில், வாழ்விற்கான உண்மையான மதிப்பீடுகளைக் கண்டுகொள்ள, அனவருக்கும் ஊக்கமளிக்கிறது.

கார்மேல் அன்னையின் கரங்களில் அனைவரையும் ஒப்படைப்பதாகக் கூறும் திருத்தந்தையின் இந்த வாழ்த்துச் செய்தி, திருத்தந்தைக்காகவும், திருஅவைக்காகவும் செபிக்குமாறும் அழைப்பு விடுக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.