2015-08-01 16:03:00

ஜூபிலி ஆண்டில் சனிக்கிழமைகளில் திருத்தந்தையின் பொதுமறையுரை


ஆக.01,2015. வருகிற டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கும் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில், சனிக்கிழமைகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொது மறையுரைகள் இடம்பெறும் என்று, பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் Georg Gänswein அவர்கள் அறிவித்தார்.

எண்ணற்ற திருப்பயணிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டில், 2016ம் ஆண்டு சனவரியிலிருந்து நவம்பர் வரை, சனிக்கிழமைகளிலும் மாதத்திற்கு ஒன்று வீதம் திருத்தந்தையின் பொதுமறையுரைகள் இடம்பெறும் என்று, பேராயர் Gänswein அவர்கள் மேலும் கூறினார்.

2016ம் ஆண்டு சனவரி 30ம் தேதியன்று, இந்த சனிக்கிழமை முதல் பொதுமறையுரை இடம்பெறும் என்று கூறிய பேராயர் Gänswein அவர்கள், இந்த ஆகஸ்ட் 26ம் தேதி இடம்பெறும் புதன் பொது மறையுரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நூறாவது புதன் பொது மறையுரை என்பதையும் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.