2015-07-31 16:35:00

மனித வர்த்தகத்தை முறியடிக்க எல்லாருக்கும் அழைப்பு


ஜூலை,31,2015. ஐ.நா.வின் மனித வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டுமென ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 30, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள பான் கி மூன் அவர்கள், மனித வர்த்தகத்தின் வழியாக மனிதர்களைப் பயன்படுத்துவது, மனித மாண்புக்கு எதிரான மாபெரும் குற்றங்களில் ஒன்று என்று கூறியுள்ளார்.

மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் மக்களில் 33 விழுக்காட்டினர் சிறார். குறைந்தது 152 நாடுகளைச் சேர்ந்த மக்கள், 124 நாடுகளுக்கு மனித வர்த்தகர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.   

2013ம் ஆண்டில், மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளை ஐ.நா. பொது அவை கொண்டு வந்தது. மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் மக்களின் நிலைமைகளை எடுத்துரைக்கவும், இப்படி பலியாகும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கவும் இந்நாள் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.