2015-07-27 15:48:00

இஸ்பெயின் தாத்தா பாட்டிகள் தினத்திற்கு திருத்தந்தை செய்தி


ஜூலை,27,2015. இஸ்பெயினில் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட தாத்தா பாட்டிகள் தினத்திற்கென செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயது முதிர்ந்தோர், இயேசுவோடு நெருக்கமாக வாழும் தங்களின் விசுவாசத்தை மீண்டும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

வயது முதிர்ந்தோர், தங்களின் ஞானம் நிறைந்த மற்றும் தாங்கள் போற்றிப் பேணும் அடையாள வார்த்தைகளால் சமுதாயத்திற்கு இன்னும் தொடர்ந்து நல்ல பங்காற்ற முடியும் என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

அன்னை மரியாவின் பெற்றோராகிய புனிதர்கள் சுவக்கீன், அன்னா விழாவாகிய ஜூலை 26ம் தேதியன்று இஸ்பெயினில் தாத்தா பாட்டிகள் தினம் சிறப்பிக்கப்படுகின்றது.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தாத்தா பாட்டிகளை ஊக்குவித்து, வாழ்த்துத் தெரிவித்தார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.