2015-07-25 16:27:00

சீனா-சிலுவைகள் அகற்றப்படுவதற்கு எதிராக 90 வயது ஆயர்


ஜூலை,25,2015. சீனாவின் Zhejiang மாநிலத்தில் சிலுவைகள் மற்றும் ஆலயங்கள் தகர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அம்மாநிலத்தின் Wenzhou மறைமாவட்ட 90 வயது ஆயர் Vincent Zhu Weifang மற்றும் அவருடன் சேர்ந்து 26 அருள்பணியாளர்கள் Wenzhou நகர அரசு கட்டடத்திற்கு முன்பாக போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இவர்களை காவல்துறை கலைக்க முயற்சித்தபோது, இறைஇரக்க செபமாலையை செபித்துக் கொண்டிருந்தனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

“விசுவாச மாண்புக்குப் பாதுகாப்பு:சிலுவைகள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு” என்ற வார்த்தைகள் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்திக்கொண்டு இப்போராட்டத்தை இவர்கள் நடத்தினர்.

Zhejiang மாநில அரசின் இந்நடவடிக்கையால் ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளவேளை, இதை எதிர்த்து கடந்த ஆண்டிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆயர் Zhu.

Lishuiவில், வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆலயங்களை அழிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.