2015-07-23 16:43:00

இந்தியா-2 நாள் நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.25 கோடி இழப்பு


ஜூலை,23,2015. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்துவதற்கு ஒரு நிமிடத்துக்கு 2.5 இலட்சம் ரூபாய் செலவிடப்படும்வேளை, இரண்டு நாட்களாக, நாடாளுமன்ற அவையின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால் மட்டும்.25 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20, இத்திங்களன்று இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கியது. அது தொடங்கிய முதல் நாளே, அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமலேயே முடங்கின.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாப்பிடுவதற்காக நடத்தப்படும் உணவகத்திற்கு மத்திய அரசு மானியம் என்ற பெயரில் பல கோடிகளைச் செலவிடும் நிலையில், நடைபெறாத நாடாளுமன்றக் கூட்டத்துக்கு இப்படியும் சில கோடிகள் இழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.