2015-07-20 16:58:00

கிறிஸ்தவ சபை அறிக்கை வெளியிட சீன மாநில அரசு தடை


ஜூலை,20,2015. கோவில்களில் வைக்கப்படும் வெளிப்புறச் சிலுவைகள் அகற்றப்படவேண்டும் என்ற சீனாவின் Zhenjiang மாநில அரசின் ஆணைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அம்மாநில கிறிஸ்தவ சபையின் அறிக்கைகளை வெளியிட தடை விதித்துள்ளது அரசு.

சிலுவைகளை கோவில்களின் முகப்பிலிருந்து அகற்றும் பணியை சீன Zhenjiang அரசு கைவிடவேண்டும் என அம்மாநில Protestant கிறிஸ்தவ சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டதை, திரும்பப் பெறவேண்டும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை ஏற்க கிறிஸ்தவ சபை மறுத்ததால், அதன் முத்திரை தாங்கிய அறிக்கையை வெளியிட அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 18 மாதங்களில் மாநில அரசு 1,200க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து சிலுவைகளை அகற்றியுள்ளது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.