2015-07-20 16:47:00

கடந்த ஆண்டு இந்தியாவில் 5,650 விவசாயிகள் தற்கொலை


ஜூலை,20,2015.  கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 2,568 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் 898 பேரும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 826 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சனை மற்றும் கடன் தொல்லை ஆகியவையே தற்கொலைக்கான முக்கிய காரணமாக இருந்துள்ளன.

மகாராஷ்டிராவில் 2013ம் ஆண்டில் ஏறக்குறைய 3,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் விவசாயிகள் தற்கொலை சற்று குறைந்துள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.