2015-07-18 15:07:00

ஜாபுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருள்பணி பேசில் பூரியா


ஜூலை,18,2015. இந்தியாவின் ஜாபுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இறைவார்த்தை சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் பேசில் பூரியா(Basil Bhuriya) அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜாபுவா மறைமாவட்டத்தின் Panchjuiல் 1956ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் பேசில் பூரியா அவர்கள், புனே பாப்பிறை இறையியல் கல்லூரியில் மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை முடித்து, 1985ம் ஆண்டில் இறைவார்த்தை சபையில் இறுதி அர்ப்பணம் எடுத்தார்.

1986ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், இன்டோர் புனித தாமஸ் குருத்துவக் கல்லூரி அதிபர், தான்ட்லா அமலமரி இதய பங்குக்குரு, இறைவார்த்தை சபையின் இந்திய மத்திய மாநில அவையின் ஆலோசகர் என்று, பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

போபால் உயர்மறைமாவட்டத்திலிருந்து 2002ம் ஆண்டு புதிய மறைமாவட்டமாக உருவான ஜாபுவாவில் 38 ஆயிரத்திற்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர். இங்குள்ள 30 பங்குத்தளங்களில் 68 அருள்பணியாளர்களும், 26  அருள்சகோதரர்களும், 211 அருள்சகோதரிகளும் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.