2015-07-17 17:22:00

கொலம்பியா, இஸ்பெயினில் குருக்கள் கொலை


ஜூலை,17,2015. கொலம்பியாவிலும், இஸ்பெயினிலும் இரு அருள்பணியாளர்கள் கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் Montería நகர்ப் பகுதியில் Barrio Sucre பங்கின் புனித அன்னை மரியா ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்காக, அருள்பணியாளர் Luis Alfonso León Pereira அவர்கள் திருப்பூட்டறையில் தயாராக இருந்த நேரத்தில் கொடூரமாய்க் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்பானியரான அருள்பணியாளர் León Pereira அவர்கள், 48 ஆண்டுகள் கொலம்பியாவில் மறைப்பணியாற்றியுள்ளார். திருடுவதற்காக அந்த ஆலயத்தில் நுழைந்த வீடற்ற ஒருவர் இக்கொலையைச் செய்தார் என்று கூறப்படுகிறது.

மேலும், இஸ்பெயின் நாட்டின் புனித Leandro அருள்சகோதரிகள் இல்லத்தில் அருள்பணியாளர் Carlos Martinez Perez அவர்கள் திருப்பலி நிறைவேற்றி முடித்து தனது அறைக்குத் திரும்பியபோது கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 75. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.