2015-07-11 16:18:00

கடுகு சிறுத்தாலும் : முக்கியத்துவங்களின் வரிசை மாறிவருகிறது


ஐந்து வயது சிறுமி, வேலைக்கு சென்று வந்த தன் அம்மாவிடம் கேட்டாள், ‘ஏம்மா.. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?  என்று.

‘அதைப் போய் யாராவது ஆயாகிட்ட கொடுப்பாங்களா’என்றார் அம்மா.

‘சரி, சாவி வேண்டாம். நம்ம பீரோவுல இருக்குற நகை, பணத்தை எல்லாம் ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கலாம்ல’என திருப்பிக் கேட்டார் அச்சிறுமி.

 ‘என்ன கேள்வி இது? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்ட கொடுக்கக் கூடாதும்மா’ என எரிச்சலுடன் பதிலளித்தார் தாய்.

‘அப்போ ஏம்மா என்னை மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப்போற? அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லையா?’ என மகள் கேட்டபோது, அம்மாவிடம் பதில் இல்லை. கண்களின் ஒரத்தில் எட்டிப்பார்த்த கண்ணீரே பதிலானது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.