2015-07-06 15:43:00

தாய்லாந்து-நற்செய்தி அறிவிப்பில் இளையோர்க்கு முக்கிய பங்கு


ஜூலை,06,2015. நாம் மக்களுக்கு மிக அருகில், உண்மையான மறைபோதகர்களாக வாழ வேண்டுமென்று தாய்லாந்தின் Chiang Mai ஆயர் Francis Xavier Vira Arpondratana அவர்கள் கூறினார்.

கத்தோலிக்கத்திற்கு அதிகமாக மக்கள் இணையும் Chiang Mai மறைமாவட்ட ஆயர் Vira அவர்கள், ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கல்வி, சமுகத்தோடு ஒன்றிணையும் ஆவல் ஆகிய இரண்டுமே கத்தோலிக்கத்திற்கு மக்கள் வருவதற்குரிய காரணங்கள் என்று கூறினார்.

போதைப் பொருள் பயன்பாடு, நுகர்வுத் தன்மை போன்றவற்றை ஒழித்தல் உட்பட நற்செய்தி அறிவிப்பில் பல கூறுகள் உள்ளடங்கியுள்ளன என்றும், இதில் இளையோர்க்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் கூறினார் ஆயர் Vira.

1987ம் ஆண்டில் 17,533 கத்தோலிக்கர் இருந்த Chiang Mai மறைமாவட்டத்தில் தற்போது 51 ஆயிரத்துக்கு அதிகமான கத்தோலிக்கர் உள்ளனர். தாய்லாந்து கத்தோலிக்கரில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் பூர்வீக இனத்தவர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.