2015-07-06 15:58:00

Laudato Si’ திருமடலை நடைமுறைப்படுத்த சமய சுதந்திரம் அவசியம்


ஜூலை,06,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si’- இறைவா, உமக்கே புகழ் என்ற புதிய திருமடல் வலியுறுத்தும் அறிவுரைகளை நடைமுறைப்படுத்த சமய சுதந்திரம் இன்றியமையாதது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி பேசிய அந்நாட்டு ஆயர் பேரவையின் வீட்டு நீதி ஆணையப் பேச்சாளர் Miami பேராயர் Thomas Wenski அவர்கள், கத்தோலிக்கர், இத்திருமடலின் போதனைகளுக்குச் சான்றுகளாய் வாழ்வது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

பொதுமக்கள் இத்திருமடலை நடைமுறைப்படுத்த முழு சமய சுதந்திரம் அவசியம் என்றும், சமய சுதந்திரம், பிற உரிமைகளுக்கெல்லாம் உறுதி வழங்கும் மனித உரிமையாகும்  என்றும் கூறினார் பேராயர் Wenski.

இவ்வாண்டின் அமெரிக்க ஐக்கிய நாட்டு சுதந்திர தினம், சாட்சி பகர சுதந்திரம் என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்டது. 

ஆதாரம் : EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.