2015-06-27 16:29:00

திருப்பீட சமூகத்தொடர்பு அமைப்புகள் ஒருங்கிணைப்பு


ஜூன்,27,2015. திருப்பீடத்தில் இதுவரை செயல்பட்டுவந்த சமூகத்தொடர்பு அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சமூகத்தொடர்பு செயலகம் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின்  சமூகத்தொடர்பு ஆணைக்குழு, திருப்பீட செய்தித் தொடர்பு அலுவலகம், திருப்பீட இணையத்தள செயலகம், வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி, L’Osservatore Romano நாளிதழ், வத்திக்கான் அச்சகம், பகைப்பட அலுவலகம், வத்திக்கான் புத்தக விற்பனையகம் ஆகியவை இந்த புதிய அமைப்பின் கீழ் செயல்படும் என Motu Proprio எனும் சுயத் தீர்மான ஆணை மூலம் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த புதிய அமைப்பின் தலைவராக, வத்திக்கான் தொலைக்காட்சி நிலையத்தின் தலைவர் அருள்பணி Dario Edoardo Viganò, செயலராக, அருள்பணி Lucio Adrian Ruiz, பொது இயக்குனராக Paolo Nusiner, துணைப்பொது இயக்குனராக, வத்திக்கான் வானொலியின் Giacomo Ghisani ஆகியோரையும் நியமித்து, ஆணை பிறப்பித்துள்ளார் திருத்தந்தை.

மேலும், 'அனைவருக்கும், குறிப்பாக அதிகம் அதிகமாக முயல்வோருக்கு உதவுவதற்கு திறந்த மனதுடன் காத்திருக்கும் அன்னையே, திரு அவை' என இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் பக்கத்தில், செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.