ஒரு காட்டில் முனிவர் ஒருவர் தவம் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு நோய் போய்க்கொண்டிருந்தது, அதன் பெயர் காலரா...!
முனிவர் நோயைக் கூப்பிட்டு, ‘எங்கே போகிறாய்’ என கேட்டார்,
‘பக்கத்து ஊரில் திருவிழா, நான் அங்கு சென்று எல்லாருக்கும் காலராவை
பரப்பிவிட்டு காலராவினால் கொல்லப் போகிறேன்’ என்றது நோய்.
‘இது பாவம் இல்லையா’ என முனிவர் கேட்க, ‘அப்புறம் ஏன் என்னை இறைவன் படைக்கவேண்டும்’ என நோய் கேட்டது
‘சரி. வெறும் 100 பேரை மட்டும் கொல், அதற்கு மேல் உயிர்பலி ஏற்பட்டால், என் சாபத்திற்கு ஆளாவாய்’ என முனிவர் கூறி அனுப்பினார்.
ஆனால் காலராவினால் உயிர் பலி 2000மாக உயர்ந்துவிட்டது.
முனிவருக்கு கோபம். நோயை அழைத்து ‘ஏன் இப்படி செய்தாய்’ எனக் கேட்டார்!
‘நான் கொன்றது 100 பேர்தான். மற்றவர்கள் அனைவரும் பயத்தினால் இறந்தவர்கள். நான் என்ன செய்யமுடியும், முனிவரே!’ என அப்பாவியாகக் கேட்டது காலரா நோய்.
பயம் பாதி கொல்லும்!
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |