2015-06-25 17:25:00

வாயுக்களின் வெளியேற்றத்தை, நெதர்லாந்து குறைக்கவேண்டும்


ஜூன்,25,2015. புவியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை, நெதர்லாந்து நாடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தது 5 விழுக்காடு குறைக்கவேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புவியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றம் குறைக்கப்படாவிடில், இந்த நூற்றாண்டின் இறுதி 50 ஆண்டுகளில், மிகக் கடுமையான காலநிலை பாதிப்புக்கள் ஏற்படும், உணவு மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று இவ்வமைப்பினர் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் வாதாடியிருந்தனர்.

புவியின் வெப்பம் கூடினால், கடல்மட்டம் உயரும் வாய்ப்புக்கள் அதிகமென்றும், நெதர்லாந்து நாடு கடல்மட்ட உயர்வால் அதிக அளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் இவ்வமைப்பினர் முன்வைத்த வாதங்களில் கூறப்பட்டது. 

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.