2015-06-24 16:15:00

மூதாதையரின் ஊர் தந்த வரவேற்பினால் திருத்தந்தை மகிழ்வு


ஜூன்,24,2015. தன் மூதாதையரின் ஊரில் தனக்குக் கிடைத்த வரவேற்பு தான் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருந்ததென்றும், அது தன்னை மிகவும் மகிழ்வடையச் செய்ததென்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஜூன் 21, 22 ஆகிய இருநாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் தூரின் நகரில் மேற்கொண்ட பயணத்தின்போது, அவரது உறவினர்கள் அறுவரின் குடும்பங்களைச் சேர்ந்த 30 பேரைச் சந்தித்தது குறித்து, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்ட குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தந்தை, மாரியோ பெர்கோலியோ அவர்கள், 1908ம் ஆண்டு, திருமுழுக்கு பெற்ற புனித தெரேசா ஆலயத்தில் சிறிது நேர செபத்தில் ஈடுபட்டத் திருத்தந்தை, குடும்பத்தை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது மன்றத்திற்காக தன் மூதாதையரின் கோவிலில் செபித்ததாகக் கூறினார்.

திருத்தந்தையின் தூரின் நகரப் பயணத்தையும், புனித தோன் போஸ்கோ அவர்கள் பிறந்ததன் 2ம் நூற்றாண்டு நிறைவையும் ஒட்டி, தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வரும் இயேசுவின் அடக்கத்தின்போது, அவரது உடலை மூடியிருந்த புனிதத் துணி, ஜூன் 24, இப்புதன் முடிய மக்களின் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.