2015-06-20 17:40:00

திருத்தந்தையின் திருமடலை ஆசியாவில் பரவலாக்க ஆயர்கள் திட்டம்


ஜுன்,20,2015. உலகின் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகம் ஒன்றை துவக்கி, திருத்தந்தையின் திருமடலை அனைத்து மக்களிடமும் சேர்க்க உள்ளதாக ஆசிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கடவுளின் படைப்பை பாதுகாப்பது குறித்த ஆறிவியல் மற்றும் ஒழுக்கரீதி சார்ந்த காரணங்களை மக்களிடையே எடுத்துச் சென்று, அவர்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசியாவின் பல பகுதிகளில் தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கை நடத்த உள்ளதாகவும் ஆசிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, திருத்தந்தையின் 'Laudato Si' என்ற புதிய திருமடல் குறித்து இந்திய ஆயர் பேரவையின் சார்பில் கருத்துத் தெரிவித்த அதன் துணைப் பொதுச்செயலர் அருள்பணி ஜோசப் சின்னையன் அவர்கள், திருத்தந்தையின் செய்தி அனைத்துக் குடும்பங்களையும் தனியார்களையும் சென்றடையும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், மறைமாவட்ட அளவிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.