2015-06-20 17:32:00

திருத்தந்தையின் இரண்டு நாள் தூரின் பயணம்


ஜுன்,20,2015. இயேசுவின் இறந்த உடலைப் போர்த்திய துணியின்முன் வணங்கி செபிக்கவும், புனித ஜான் போஸ்கோ பிறந்ததன் 200ம் ஆண்டை சிறப்பிக்கவும் இஞ்ஞாயிறு மற்றும் திங்கள் தினங்களில் இத்தாலியின் தூரின் நகரில் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு காலை இத்தாலிய நேரம் 7 மணிக்கு உரோம் நகர் சம்பினோ விமான தளத்திலிருந்து புறப்பட்டு, ஒருமணிநேரத்தில் தூரின் நகரை அடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் தொழிலாளர் பிரதிநிதிககளை சந்திப்பதுடன், தூரின் நகரின் வயது முதிர்ந்த அருள்பணியாளர்களுடன் இணைந்து, இயேசுவின் புனித துணியின் முன் செபிப்பார்.

அவரின் ஞாயிறு பயணத் திட்டத்தில், பொதுமக்களுக்கு திருப்பலி நிறைவேற்றல், இளைஞர்களுடன் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்துதல், மரியன்னை திருத்தலத்தைச் சந்தித்தல், சலேசிய துறவுச் சபையினரைச் சந்தித்து உரையாடல், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்தல், இளையோரை சந்தித்தல் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.

அவரின் திங்கள் பயணத்திட்டத்தில், கிறிஸ்தவ சபைகளுடன் ஆன சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.