2015-06-20 18:08:00

உடலுக்கும் மனதுக்கும் யோகா இதமளிப்பதாக ஆய்வுகளின் முடிவுகள்


ஜுன்,20,2015. யோகா அல்லது தியானம் செய்வதன்மூலம், உணர்ச்சிவசப்படுதல் குறைதல், ஞாபக சக்தி அதிகரித்தல், மனம் குவிப்புத்திறன் மேம்படுதல், உடல் நலம் சீரடைதலுடன், மூளையின் செயல்பாடும் பலமடங்கு அதிகரிப்பதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடல் நலத்திற்கு நல்ல விளைவுகளைத் தரும் யோகா முறைகளால், பலருக்கு நோய்கள் குணமாகியுள்ளதாகவும், தூக்கம் சீர்பட்டுள்ளதாகவும், மூளை சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகா அல்லது தியானம் செய்வதன்மூலம், மூளையின் இடது பகுதியும் வலது பகுதியும் சிறப்பாக ஒன்றிணைந்து செயல்பட துவங்குவதாக மருத்துவ ஆய்வுக் கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா, போர்த்துக்கல், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவைகளிலுள்ள சில ஆய்வு மையங்கள், யோகா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதன் நல்விளைவுகளை வெளியிட்டுள்ளன.

உலகில் ஜூன் 21, இஞ்ஞாயிறன்று உலக யோகா யோகா தினம் சிறப்பிக்கப்படுகின்றது. 

ஆதாரம் :Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.