2015-06-20 17:58:00

இரமதான் மாத நல்லெண்ண நடவடிக்கையாக மீனவக் கைதிகள் விடுதலை


ஜுன்,20,2015. அண்மையில் துவங்கியுள்ள இஸ்லாமியர்களின் இரமதான் மாதத்தையொட்டிய நல்லெண்ண நடவடிக்கையாக, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் சிறைவைக்கப்பட்டிருந்த அடுத்த நாட்டு கைதிகளுள் சிலரை விடுவித்துள்ளனர்.

88 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா விடுவித்துள்ளவேளை, 113 இந்திய மீனவர்களை  பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

அரேபியக் கடலில் மீன்பிடிக்கும்போது திசை தெரியாமல் பிற நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்த்தால் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு, தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆதாரம் :MISNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.