ஜுன்,19,2015. செல்வங்களை செல்வங்களாகவே குவிப்பதே போர்களுக்குக் காரணமாகின்றது, மற்றும் மனித மாண்பு இழக்கப்படுவதற்கும், குடும்பங்கள் சிதைக்கப்படுவதற்கும் காரணமாகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்’ என்ற நற்செய்தி வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.
நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தை, பொதுநலனுக்குப் பயன்படுத்தும் முயற்சிகள், ஒரு பெரும்போராட்டமாக இன்றைய நாட்களில் உருவாகி வருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
நம் பாதுகாப்பிற்கென சொத்துக்களை சேர்ப்பதாக எண்ணும்போது, நமது சொத்துக்களே அந்தப் பாதுகாப்பு உணர்வைப் பறிப்பதோடு, நம் மாண்பையும் பறித்து வருகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இவ்வுலகின் செல்வங்களுக்கு நாம் உரிமையாளர்கள் அல்ல, மாறாக, அவற்றைத் தகுந்த வகையில் பயன்படுத்தும் பொறுப்பாளர்களே என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |