2015-06-19 17:24:00

கடுகு சிறுத்தாலும்...: இடம் மாறினாலும் சுமை ஒன்றே


வணிகர் ஒருவர் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும்போது எதிரிகள் வருவதைப் பார்த்தார். பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்கள்” என்றார்.

கழுதையோ, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் வரமறுக்கிறாய்?” என்று கேட்டார் வணிகர்.

”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது கழுதை.

அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.