2015-06-16 15:33:00

மருத்துவத் தொண்டுக்காக பிரித்தானிய அரசின் விருது


ஜூன்,16,2015.  இலங்கை மட்டக்களப்பில் பிறந்து பாப்புவா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவர் ஆதித்தன் செல்வநாதன் அவர்களுக்கு பிரித்தானிய அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சிறிய நாடான பாப்புவா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக பாராட்டுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாப்புவா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் அவர், விமானங்களில் பறப்பவர்களின் உடல்நிலை குறித்த சிறப்பு மருத்துவப் படிப்பை படித்துள்ளார்.

பாப்புவா நியூகினியில் போதிய உயர்தர மருத்துவ வசதிகள் இல்லையென்றும், உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர் உயர் சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கோ அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கோ செல்லவேண்டிய நிலை உள்ளது எனவும் ஆதித்தன் செல்வநாதன் கூறினார்.

ஆதாரம் :  பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.