2015-06-15 16:50:00

மத்தியக் கிழக்கில் அருள் பணியாளர்களின் சேவை தொடரட்டும்


ஜூன்,15,2015. கீழைவழிபாட்டுமுறை அருள் பணியாளருக்கும், மறைமாவட்டங்களுக்கும் உதவிவரும் ROACO என்ற அமைப்பின் உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினருக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் முடிவுறாத மோதல்கள் மற்றும் மக்களின் துன்பங்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, இம்மக்களின் துன்பக் குரலுக்குச் செவிமடுக்கும், மற்றும் அவர்களிடையே உதவிகள் புரியும் அருள் பணியாளர்களின் சேவை தொடரட்டும் என்று வேண்டிக் கொண்டார்.

கிழக்கு ஐரோப்பாவில் மக்களிடையே கீழைவழிபாட்டு முறை திருஅவைகள் ஆற்றிவரும் பணிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

துன்புறும் மக்களின் அழுகுரலை நம்முடையதாக ஏற்றுக்கொள்ளும்போதுதான், பாராமுகம் என்ற சுவரை உடைத்து, தன்னலத்தை நம்மால் வெற்றிகொள்ள முடியும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ பிறரன்பை போதித்துச் செயல்படுத்தும் ஒவ்வொருவரும், மனித மாண்புக்கு ஊறு விளைவிக்கும் ஒவ்வொன்றையும் எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.