2015-06-15 17:11:00

கொலம்பியா அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஜூன்,15,2015. கொலம்பியா நாட்டு அரசுத் தலைவர், Juan Manuel Santos Calderón அவர்கள், இத்திங்கள் காலை, வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

வத்திக்கானுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், கொலம்பியாவில், மனித வளர்ச்சி, மற்றும் சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

கொலம்பியா நாட்டில் நிலவும் இறுக்கமானச் சூழலைத் தீர்வுக்குக் கொணர, பல்வேறு குழுக்களும், திறந்த மனதுடன், ஒப்புரவு, உரையாடல் ஆகிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டுமென்று இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

திருத்தந்தையைச் சந்தித்தபின், கொலம்பியா அரசுத் தலைவர் Santos Calderón அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.