2015-06-15 16:19:00

ஐரோப்பாவில் வெளிநாட்டவர்கள் மீதான 'வெறுப்புணர்வு அச்சம்'


ஜூன்,15,2015. ஆப்பிரிக்காவிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் ஐரோப்பாவுக்கு பெருமளவில் மக்கள் குடிபெயர்ந்துவரும் சூழ்நிலையால் வெளிநாட்டவர்கள் மீதான நியாயமற்ற வெறுப்புணர்வுடன் கூடிய அச்சம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக ஐ.நா.வின் குடியேற்றதாரர் தொடர்பான பிரதிநிதி பீட்டர் சதர்லேண்ட் கூறினார்.

குடியேற்றதாரர், பெரும்பாலும் சிரியாவிலிருந்தும் எரித்திரியாவிலிருந்தும் வெளியேறுகின்றவர்கள் என்றுரைத்த சதர்லேண்ட் அவர்கள், இவர்கள் இறுதியாக சென்று சேருகின்ற ஐரோப்பிய நாடுகளிடம் தஞ்சம் பெறுவதற்கு அவர்கள் உரிமையுடையவர்கள் என்றும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் தஞ்சம் அளிக்கப்படும் குடியேற்றதாரர் எண்ணிக்கை தொடர்பில் புதிய நடைமுறை அவசியம் என்றும் ஐ.நா. பிரதிநிதி தெரிவித்தார். 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.