2015-06-13 15:57:00

முதல் அனைத்துலக ஆல்பினிசம் விழிப்புணர்வு நாள்


ஜூன்,13,2015. Albinism நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்து போராடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் இயக்குனர் Zeid Ra'ad Al Hussein

ஜூன், 13 இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட முதல் அனைத்துலக ஆல்பினிசம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு இவ்வாறு அழைப்பு விடுத்த Al Hussein அவர்கள், எல்லாச் சமூகங்களிலும் Albinism நோயால் தாக்கப்பட்டவர்கள் உள்ளனர், இவர்கள் அனுபவிக்க வேண்டிய மனித உரிமைகளை உலகினர் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோரின் ஒருவகை மரபணுவால் வெண்மை நிற வியாதியால் தாக்கப்படும் Albinism நோயாளிகள், கடும் துன்பங்களை, சில நேரங்களில் விஷஊசி போட்டுக் கொல்லப்படும் கொடுமையையும் எதிர்கொள்கின்றனர்.

குறைந்தது 25 ஆப்ரிக்க நாடுகளில் Albinism நோயாளிகள் கொல்லப்படுகின்றனர், உறுப்புகள் அகற்றப்படுகின்றனர் அல்லது தாக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறார்.

21ம் நூற்றாண்டில் இத்தகைய பாகுபாடுகளுக்கோ அல்லது கொடுமைகளுக்கோ இடமில்லை என்று கூறினார் Al Hussein.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.