2015-06-13 16:01:00

மாபெரும் சுதந்திர அறிக்கை கையெழுத்திடப்பட்டதன் 800ம் ஆண்டு


ஜூன்,13,2015. நவீன சனநாயகங்களில் பொறிக்கப்பட்டுள்ள தனிமனிதச் சுதந்திரம் மற்றும் விடுதலைக்கு அடித்தள அறிக்கையாய் உலகெங்கும் போற்றப்படும் மாபெரும் சுதந்திர அறிக்கை கையெழுத்திடப்பட்டதன் 800ம் ஆண்டு நிறைவு ஜூன் 15, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படுகின்றது.

'Magna Carta' எனப்படும் இந்த அறிக்கை கையெழுத்திடப்பட்ட 800ம் ஆண்டு நிறைவு நிகழ்வை, இலண்டனின் தெற்கிலுள்ள Runnymedeல் பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் அவர்கள் தலைமையேற்று நடத்துவார். இந்த அறிக்கை, Runnymedeல் கையெழுத்தானது.

இந்த அறிக்கை கையெழுத்தான இரு மாதங்கள் சென்று திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்கள் இதனை இரத்து செய்து அந்த உடன்பாட்டின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.