2015-06-13 15:47:00

கத்தோலிக்கரின் எண்ணிக்கைக்கேற்ப பங்குகள் இல்லை


ஜூன்,13,2015. உலகளாவிய கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, அருள்பணியாளர்களும், பங்குத்தளங்களும் இவர்களின் ஆன்மீகக் காரியங்களை நிறைவேற்றும் சவாலை எதிர்கொள்கின்றனர் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகின்றது.

உலகில், குறிப்பாக, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை வளர்ந்துவருவதற்கேற்ப, அருள்பணியாளர்கள் மற்றும் பங்குத் தளங்களின் எண்ணிக்கை இல்லை என்றும், கத்தோலிக்கர் அருளடையாளங்களைப் பெறுவதற்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கின்றன என்றும் அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது

21ம் நூற்றாண்டில் திருஅவை இத்தகைய சவாலை எதிர்நோக்குகின்றது என்று ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்திலுள்ள CARA ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

1980ம் ஆண்டிலிருந்து ஆசியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 63 விழுக்காடு உயர்ந்துள்ளது மற்றும் திருப்பலிக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அவ்வளவாகக் குறையவில்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.