2015-06-12 16:11:00

திருத்தந்தை பிரான்சிஸ், போலந்து பிரதமர் Kopacz சந்திப்பு


ஜூன்,12,2015. போலந்து நாட்டுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, போலந்து பிரதமர் Ewa Kopacz அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.

இதற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளிவிவகாரத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் திருப்பீடத்தில் சந்தித்தார் போலந்து பிரதமர் Kopacz.

2016ம் ஆண்டில் போலந்தில் நடைபெறவிருக்கும் உலக கத்தோலிக்கர் இளையோர் தினத் தயாரிப்புகளில் திருஅவைக்கும், போலந்துக்கும் இடையே ஒத்துழைப்பு சிறப்பாக இடம்பெறுகின்றது என்று இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

இன்றைய உலகின் நிலைமைகள் குறித்து, சிறப்பாக உக்ரெய்ன் பற்றியும், போலந்தின் தற்போதைய சமூக-பொருளாதாரச் சூழலில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் பற்றியும், சில அறநெறிக் கூறுகள் பற்றியும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று கூறிய அச்செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

2016ம் ஆண்டில் கிராக்கோவில் இடம்பெறவிக்கும் உலக இளையோர் தின நிகழ்வுகளில் திருத்தந்தை கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.