2015-06-12 15:46:00

கடுகு சிறுத்தாலும்...: விலைமதிப்பில்லாதது தன்னம்பிக்கை


ஏழை ஒருவர் சென் துறவியைப் பார்த்து, "குருவே! நான் பெரும் ஏழை, என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், "நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார். என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினார் ஏழை. "சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களைக் கொடு" என்றார்.

அதற்கும் ஏழை ஒப்புக் கொள்ளவில்லை. "வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார் துறவி. அதற்கும் அவர் முடியாது என்றார். “உனக்கு இருபது இலட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன், உன் உயிரைக் கொடு” என்றார். அதற்கு அந்த ஏழை, “என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது” என்று கூறினார். அதைக் கேட்ட அந்த குரு அவரிடம், "உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும், கொடுக்க விரும்பாத, விலை மதிப்பற்ற, உயிரை கொண்டுள்ள நீ, எவ்வாறு ஏழை ஆக முடியும். தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.

விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும், வாழ்வை ஜெயிக்க... 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.