2015-06-11 11:39:00

நேர்காணல் – உலக குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினம்


ஜூன்,11,2015. திருச்சி மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி லில்லியன் அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, திருச்சி மாவட்டத்தில் 200 கிராமங்களில் குழந்தைத் தொழில் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். திருச்சிக்கருகில் அம்பிகாபுரத்தில் உள்ள செர்வைட் சமூகப் பணி மையத்தில் குழந்தைத் தொழிலாளர் நலன் உயர பல்வேறு வழிகளில் பணி செய்து வருகிறார் இவர். இவ்விடத்தில் இவர்கள் நடத்தும் குழந்தைத் தொழிலாளர் பள்ளி, திருச்சி மாவட்டத்தில் model பள்ளியாக அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேரிடைப் பார்வையில் உள்ளது. ஜூன்,12 இவ்வெள்ளி, உலக குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினம். இந்நாளை முன்னிட்டு, அருள்சகோதரி லில்லியன் அவர்களைச் சந்திப்போம் 








All the contents on this site are copyrighted ©.