2015-06-10 17:03:00

விவசாயிகளுக்கு அநீதி - கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி


ஜூன்,10,2015 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்த கேரள அரசு, அவர்களுக்குரிய தொகையை மூன்று மாதங்களாக தராமல் இருப்பது அநீதி என்று சீரோ மலபார் திருஅவைத் தலைவர், கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி அவர்கள் கூறினார்.

சரியான விளைச்சலும், அறுவடையும் இன்றி, துன்பத்தில் வாடும் விவசாயிகளுக்கு உரியத் தொகையை அரசு இன்னும் அளிக்காமல் இருப்பது, விவசாயிகளை இன்னும் அதிகத் துன்பத்தில் ஆழ்த்தும் என்று கர்தினால் அலஞ்சேரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

கேரளாவின் குட்டநாடு எனுமிடத்தில் விவசாயிகள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கர்தினால் அலஞ்சேரி அவர்கள், அண்மித்துவரும் மழைக்காலம், விவசாயிகளின் வறுமையை இன்னும் அதிகரிக்கும் என்று எடுத்துரைத்தார்.

கேரள அரசு, விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல்லுக்கு உரியத் தொகையாக, 375 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.