2015-06-10 17:11:00

பெண்களுக்கு மாண்பு, சமுதாய வளர்ச்சியின் அளவுகோல்


ஜூன்,10,2015 பெண்களுக்குரிய மாண்பை வழங்குவதே ஒரு சமுதாயம் தகுதியான வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நிர்ணயிக்கும் அளவுகோல் என்று அர்ஜென்டீனா ஆயர்கள் கூறியுள்ளனர்.

அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் பொதுநிலையினர் மற்றும் மேய்ப்புப்பணி பணிக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, அந்நாடு பெண்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகளை வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.

பெண்கள் சந்திக்கும் வன்முறைகளின் பெரும்பகுதி, அவர்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து எழுவது வேதனை தருகிறது என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 26.2 விழுக்காட்டினர் வறுமையில் துன்புறுகின்றனர் என்று, அர்ஜென்டீனாவிலிருந்து அண்மையில் வெளியான ஓர் அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.