2015-06-09 16:01:00

பாகிஸ்தானில் ஆசியாவிலே மிகப்பெரிய சிலுவை


ஜூன்,09,2015. பாகிஸ்தானின் கராச்சி புறநகர்ப் பகுதியிலுள்ள Gora Qabristan கல்லறைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மிகப் பெரிய சிலுவை, அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவரின் பய உணர்வுகளை நீக்கி நம்பிக்கைக் கதிர்களை வீசுவதாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மக்கள் நெருக்கம் மிகுந்த, அதேநேரம் வன்முறை நிறைந்த கராச்சியில் ஆசியாவிலே மிக உயரமான சிலுவை அமைக்கப்பட்டு வருகிறது.

கராச்சியின் பெரிய Gora Qabristan கல்லறைத் தோட்டத்தில், கான்கிரீட் தளத்தில், 42.6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் இரும்புச் சிலுவைக்கு, கிறிஸ்தவத் தொழிலதிபர் Henry Pervez Gill அவர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்.

Gill அவர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு வரும் இச்சிலுவை ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்தவர்கள் இச்சிலுவை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள் என்றும், அப்பகுதியை, நிறையக் கிறிஸ்தவர்கள் பார்வையிடுகின்றார்கள் என்றும், இக்கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள முகமது அலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.