2015-06-08 16:41:00

காமரூனில் சிறார்கள் கடத்தப்படுவது தொடர்கிறது


ஜூன்,08,2015. 2014ம் ஆண்டின் இறுதியிலிருந்து இதுவரை காமரூன் நாட்டில் ஏறத்தாழ 1500 சிறார் Boko Haram இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

8 வயதிற்கும் 12 வயதிற்கும் இடைப்பட்ட சிறார்கள் கடத்தப்பட்டு, உள்நாட்டுச் சண்டையில் அரசுப் படைகளுக்கு எதிராக Boko Haram தீவிரவாதிகளால் முன்னணியில் நிறுத்தப்படுவதாகவும், மேலும் பலர், இந்த தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் தண்ணீரைக் கொணர வேலையாட்களாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார் ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் Najat Rochdi.

காமரூன் நாட்டில் Boko Haram இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள், 2014ம் ஆண்டு ஜூலை மாதத்தில் துவக்கியத்திலிருந்து, இக்குழுவால் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.