2015-06-05 15:54:00

பிலிப்பைன்ஸ் திருத்தூதுப் பயணம் பற்றிய நூல் வெளியீடு


ஜூன்,05,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றிய புத்தகம் ஒன்றை அந்நாட்டுத் தலத்திருஅவை வெளியிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறைத் தாக்கங்களை ஆவணமாகத் தயாரிப்பது இயலாத காரியம் எனினும், ஒரு சிறு முயற்சியாக இந்நூலை வெளியிட்டுள்ளதாக, தலத்திருஅவை அதிகாரிகள் கூறினர்.

“நான் இங்கே இருக்கிறேன்:உங்களோடு இருப்பதற்காக!” என்ற தலைப்பில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு சனவரி 15 முதல் 19ம் தேதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிலிப்பைன்சில் இடம்பெற்ற இயற்கைப் பேரிடர்களில் அந்நாடு ஏறக்குறைய 68 ஆயிரம் வகுப்பறைகளை இழந்துள்ளவேளை, பேரிடர்கள் இடம்பெற்ற பகுதிகளில் சிற்றாலயங்களைத் தற்காலிக வகுப்பறைகளாக மாற்றுமாறு அந்நாட்டு ஆயர் பேவை கேட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.