2015-06-04 15:53:00

கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டுக் கூட்டம்


ஜூன்,04,2015 குடும்பத்தை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது மன்றத்தையொட்டி, ஜூன் 4, இவ்வியாழன் முதல் 7, இஞ்ஞாயிறு முடிய, செக் குடியரசின் தலைநகர், Pragueல், கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டுக் கூட்டம், குடும்பம் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

இன்றைய ஐரோப்பாவில் குடும்பம், குடும்பம் ஒரு அருள்சாதன சக்தி என்ற இரு தலைப்புக்களில் இந்த ஆண்டு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Prague உயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Dominik Duka அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வத்திக்கான் சார்பில், கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் செயலர், பேராயர் Cyril Vasil அவர்கள் கலந்துகொள்கிறார்.

ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் உயர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக் கூட்டத்தில், கீழை வழிபாட்டு முறையைச் சேர்ந்த 14 மறைமாவட்டங்களின் ஆயர்களும், ஏனைய மறைமாவட்ட அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.