2015-06-02 15:34:00

கொலைகள், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை


ஜூன்,02,2015. கும்பல் வன்முறைகளுக்குப் பெயர் போன எல் சால்வதோர் நாட்டில் இடம்பெறும் கொலைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே நடத்தப்படுகின்றன என்று அந்நாட்டுத் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் குறை கூறினார்.

ஒவ்வொரு ஞாயிறுதோறும் திருப்பலி முடிந்து வழக்கமாக இடம்பெறும் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த சான் சால்வதோர் துணை ஆயர் Gregorio Rosa Chavez அவர்கள், நாட்டில் திறமையற்ற நிர்வாகச் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் பெருமளவில் கொலைகள் நடத்தப்படுகின்றன என்று கூறினார்.

திறமையற்ற நிர்வாகத்தையும், நாட்டில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்கு, மனித வாழ்வுக்கு விலை வைக்கவும் இவ்வன்முறைக் கும்பல்கள் துணிகின்றன என்று குறை கூறினார் ஆயர் Rosa Chavez.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் 1979ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையில், ஒரு நாளைக்கு, பத்துப் பேர் வீதம் மரணப் படைகள் கொலை செய்தன.

ஆதாரம் : Fides/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.